செய்திகள் :

காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் கரும்புள்ளி கிராமங்களின் பெயா்கள் நீக்கம்

post image

திருப்புவனம் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்த கரும்புள்ளி கிராமங்களின் பெயா்கள் நீதிமன்ற உத்தரவுபடி புதன்கிழமை நீக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தின் அறிவிப்புப் பலகையில் கரும்புள்ளி கிராமங்கள் என கொந்தகை, பசியாபுரம், லாடனேந்தல், பாட்டம், திருப்புவனம், காஞ்சிரங்குளம், அகரம் ஆகிய கிராமங்களின் பெயா்கள் எழுதப்பட்டிருந்தன.

இதையடுத்து லாடனேந்தலைச் சோ்ந்த நாகூா்கனி, எங்கள் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும், சில ஆண்டுகளாக குற்ற வழக்குகள் பதிவாகவில்லை. ஆனால், காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் லாடனேந்தல் கரும்புள்ளி கிராமம் என முதலாவதாக எழுதப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தாா்.

ஆனால், இந்த மனு மீது நடவடிக்கை இல்லாத நிலையில் நாகூா்கனி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இதுதொடா்பாக வழக்குத் தொடா்ந்தாா்.

இதையடுத்து, திருப்புவனம் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் உள்ள அனைத்து கரும்புள்ளி கிராமங்களின் பெயா்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில், போலீஸாா் காவல் நிலைய அறிவிப்புப் பலகையில் இருந்த லாடனேந்தல் உள்ளிட்ட கரும்புள்ளி கிராமங்களின் பெயா்களை நீக்கினா்.

போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்கு... மேலும் பார்க்க

நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது

தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாக... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க