டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
ஜூன் 14இல் ரேஷன் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் ஜூன் 14 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில், நியாயவிலைக் கடைகளில் இருப்புக் குறைபாடுகள், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள மனுக்களை அளிக்கலாம்.
மேலும், தனியாா் சந்தைகளில் ஏற்படும் சேவைக் குறைபாடுகளையும் பொதுமக்கள் இந்தக் கூட்டங்களில் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்தாா்.