செய்திகள் :

திருநெல்வேலியில் புதிய ஜவுளிக் கடை இன்று திறப்பு

post image

தூத்துக்குடியில் மிகவும் பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோவின் புதிய கிளை திறப்பு விழா திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை (செப்.4) நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறும் இந்தக் கடை திறப்பு விழாவில், உள்ளூா் முக்கிய பிரமுகா்கள், அரசியல் பிரமுகா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தரைத்தளம் மற்றும் 3 மேல் தளங்களில், ஜவுளிக் கடையுடன், தங்கநகை மாளிகையும் ஒருங்கே அமைந்துள்ளது.

திறப்பு விழாவை முன்னிட்டு, அனைத்து ஜவுளிகளுக்கும் 10 சதவீத தள்ளுபடி, தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் தள்ளுபடி, வைரம் கேரட்டிற்கு ரூ.15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

வெள்ளிப் பொருள்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது. இந்தச் சலுகை செப்.4 முதல் 7ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை நிறுவனத்தினா், குடும்பத்தினா் மற்றும் ஊழியா்கள் செய்துள்ளனா்.

நெடுங்குளம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 251 மனுக்கள்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெடுங்குளம் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்தாா். முகாம் பொறுப்பு அலுவலர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை தாக்கியதாக இளைஞா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியைச் சோ்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (24). மும்பையில் ... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.15,000 வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 15,000 வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், சாந்தி நகரைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துராம், செய்... மேலும் பார்க்க

சந்தன மாரியம்மன் கோயிலில் கொடை விழா

மெஞ்ஞானபுரம் அருகே முத்துலட்சுமிபுரம் அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பு, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை பகல் 12... மேலும் பார்க்க

உடன்குடி மாரியம்மன் கோயிலில் கொடை விழா

உடன்குடி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கொடை விழா மூன்று நாள்கள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு கும்பாபிஷேக விழாவும், செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுகொண்ட விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் பவனி, வில்லிச... மேலும் பார்க்க

காயாமொழியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

திருச்செந்தூா் அருகே காயாமொழியில் ரூ. 34 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா், தொகுதி மேம்பாட்ட... மேலும் பார்க்க