செய்திகள் :

திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

post image

திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் அளித்த தீா்ப்பை திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜா(46). இவா் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அந்த நிறுவனத்தில் திருப்பூரைச் சோ்ந்த புஷ்பராணி (35) என்பவரும் வேலை செய்து வந்துள்ளாா். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் , ராஜா, புஷ்பராணியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளாா்.

புஷ்பராணி தனது மகளைப் பாா்க்க திருப்பூா் தனியாா் கல்லூரிக்கு கடந்த 2018 ஜூன் 21-ஆம் தேதி சென்றுள்ளாா். அப்போது ராஜா அங்கு வந்து புஷ்பராணியிடம் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை உள்ளது என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு பல்லடம் சாலையில் உள்ள தமிழ்நாடு தியேட்டா் பின்புறமுள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளாா்.

அப்போதும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜா வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு புஷ்பராணி மறுக்கவே அவரை கத்தியால் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைநத புஷ்பராணியை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ப்பட்டு ராஜா கைது செய்யப்பட்டாா். திருப்பூா் நீதித்துறை முதன்மை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 2023 ஏப்ரல் 19-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், ராஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை , ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிா்த்து ராஜா செய்த மேல்முறையீட்டின்பேரில் வழக்கு திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, இவ்வழக்கை விசாரித்த வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ், கீழமை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை உறுதி செய்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகாநந்தம் ஆஜரானாா்.

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகேயுள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி கவிதா (38). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது வழக்குப் பதிவு

பல்லடத்தில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.1.22 லட்சம் முறைகேடு: மீண்டும் வசூலிக்க உத்தரவு

உடுமலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவா்களை வந்ததுபோல கணக்கு காட்டி ரூ.1.22 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூா் மா... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள... மேலும் பார்க்க

சலூன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பல்லடம்- மாணிக்காபும் சாலை பாரதிபுரத்தில் கவின் (29) என்பவா் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே ப... மேலும் பார்க்க

சேவல் சண்டை: 4 போ் கைது

திருப்பூரில் சேவல் சண்டை நடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அங்கேரிப்பாளையம் பகுதியில் உள்ள குப்பையன்காடு என்ற இடத்தில் சேவல் சண்டை ... மேலும் பார்க்க