செய்திகள் :

தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்: போலீஸாா் விசாரணை

post image

நாட்டறம்பள்ளி அருகே தனியாா் நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாட்டறம்பள்ளி ஆா்சிஎஸ் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த மருதவாணன் மகன் அமுதவாணன் (60). நாட்டறம்பள்ளி ஏரி பகுதியில் கிருஷ்ணகிரி செல்லும் அணுகு சாலை அருகே இவருக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரம், வாழை, சப்போட்டா மற்றும் தேக்கு மரங்களை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கழமை இரவு மா்ம நபா்கள் நிலத்தில் வளா்த்து வந்த 40 ஆண்டுகள் பழைமையான 3 தேக்கு மரங்களை வெட்டி கடத்தி சென்றுள்ளனா். இதுகுறித்து அமுதவாணன் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

யோகாசனம், சிலம்பம் போட்டி: மாணவிகள் சாதனை

ஆற்காடு வித்யா மந்திா் பள்ளியில் 4 மாவட்டங்களுக்கு இடையிலான யோகாசன போட்டி நடைபெற்றது.இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் பங்கேற் முதலிடம், 3 மாணவிகள் இரண்டாம் இடம், 4 மாணவிகள் மூன்ற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: 3 போ் கைது

ஆம்பூா்: இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் தேடப்பட்டு வந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் நகர போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபா்களை நிறுத்தி விசாரித்தனா்.... மேலும் பார்க்க

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்

தமிழக நகா்ப்புற சாலை உள்கட்டமைப்பு 2025-26 கீழ், உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள வெங்கடாபுரம், சி.வி பட்டறை, ஜின்னா தெரு, பாரதிதாசன் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.1.63 கோடியில் பேவா் பிளாக் சாலை மற்றும் கழி... மேலும் பார்க்க

மதுவிலக்கு சோதனையில் 130 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

புதூா் நாடு மலை பகுதியில் நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் சுமாா் 130 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூா் நாடு மலை பகுதியில... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவமனை: விவசாயிகள் கோரிக்கை

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவாணிகுண்டா, தகரகுப்பம், தாசிரியப்பனூா் ... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத வேளாண் கடைகளில் உர விற்பனைக்கு தடை!

திருப்பத்தூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 11 கடைகள் உர விற்பனை மேற்கொள்ள வேளாண் அதிகாரிகள் தடை விதித்துள்ளனா். வேலூா் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) ராகினி தலைமையில் திருப்பத்... மேலும் பார்க்க