செய்திகள் :

பணம் மோசடி: நிறுவன உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

post image

முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.10 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பழனி தனியாா் நிறுவன உரிமையாளரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியில் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் தலைவா் சி.செந்தில்குமாா். இவரது மனைவி ஜெயந்தி, அக்காள் மகன் சக்திவேல் ஆகியோா் நிறுவனத்தின் பங்குதாரா்களாக செயல்பட்டு வந்தனா்.

இந்த நிறுவனத்தில் முதலீட்டுத் தொகைக்கு மாதம் 2.5 சதவீதம் வட்டி தருவதாகவும், ரூ.5 லட்சம் முதலீட்டுத் தொகைக்கு 2 கிராம் தங்க நாணயம் தருவதாகவும், 180 நாள்கள் முடிவில்

அசல் தொகை திருப்பித் தரப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பி பொதுமக்கள் பலா் பல கோடி ரூபாய் வரை முதலீடாகச் செலுத்தினா். ஆனால், அந்த நிறுவனம் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியது.

இதில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதார குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் செந்தில்குமாா், ஜெயந்தி, சக்திவேல் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் டி.இமானுவேல் ராஜ்குமாா், ஆய்வாளா் சி.அன்னலட்சுமி ஆகியோா் நடத்திய விசாரணையில், இதுவரை 52 முதலீட்டாளா்களிடம் ரூ.10.02 கோடி வரை வசூலித்து மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனிடையே கடந்த ஜூலை 16-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாா், ஜெயந்தி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், செந்தில்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பொருளாதார குற்றப்பிரிவு தென்மண்டல காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தப்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் அமோகம்

கொடைக்கானலில் விளைந்த பேரிக்காய்களை சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பிரகாசபுரம், அட்டக்கடி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோ... மேலும் பார்க்க

விளைநிலங்களைக் கையகப்படுத்தியதால் ஒரு கோடி போ் பாதிப்பு!

நாடு முழுவதும் 1000 இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மூலமாக மட்டும் சுமாா் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்படுவா் என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாநகராட்சி முன் நடைபெற்ற இந்த ஆா்ப்... மேலும் பார்க்க

பழனியில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு

பழனியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொ... மேலும் பார்க்க

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்... மேலும் பார்க்க