செய்திகள் :

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி உண்ணாவிரதப் போராட்டம்!

post image

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து, அப்பகுதி மக்கள் தங்களது 3 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.

லடாக்கின் ஹுசைனி பார்க் பகுதியில், கார்கில் டெமோக்ரடிக் அலையன்ஸ் மற்றும் லெக்ஸ் அபெக்ஸ் பாடி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, இந்த 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் பல முறை, இவ்விரண்டு அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தாமதாக்கப்படுவதால், அவர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவனையின் கீழ் லடாக்கை இணைப்பது, லேஹ் மற்றும் கார்கில் பகுதிகளுக்கு தனி மக்களவைத் தொகுதிகள் மற்றும் பொது சேவை ஆணையத்தை உருவாக்குவது ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில், போராட்டக்காரர்கள், லடாக் மீதான காலனி ஆதிக்கத்தை நிறுத்தி, ஜனநாயகத்தை மீட்டெடுங்கள் எனும் வாசகங்கள் பதித்த பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, கார்கில் டெமோக்ரடிக் அலையன்ஸ்-ன் துணைத் தலைவர் அஸ்கர் அலி கர்பாலை கூறுகையில்,

“கடந்த 4 ஆண்டுகளாக, எங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஏராளமான வேலைநிறுத்தங்கள், உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் மற்றும் நடைப் பேரணி (லாடாக் - தில்லி) ஆகியவற்றை நடத்தியுள்ளோம். இதில், சிலவற்றை மத்திய அரசுடன் ஆலோசித்துள்ளோம், மேலும் சில கோரிக்கைகள் அவர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டியதுள்ளது” எனக் கூறியுள்ளார்.

மேலும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் தாமதிக்கப்படுவது அவர்களை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட தூண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாஸ் காட்டும் ஐசிஐசிஐ! புதிய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்பு ரூ.50,000!!

The people of the region have begun their 3-day hunger strike, raising 4 demands, including separate statehood for the Indian Union Territory of Ladakh.

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

‘சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞா்களாகப் பதிவு செய்பவா்களிடம், சட்டபூா்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞா் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது’ என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவி... மேலும் பார்க்க

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டநிலை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் ராகுல், பிரியங்கா பதவி விலக வேண்டும்: பாஜக

தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், மக்களவை உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து சோனியா காந்தி ஆகியோா் தாா்மிக அடிப்படையில் ராஜிநாம... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: ஓராண்டு நிறைவு பேரணியில் காவல் துறை தடியடி

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது காவல் துறையினா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ... மேலும் பார்க்க

தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம்

தில்லி பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) இரண்டாம் சுற்று மதிப்பீட்டில் 3.55 மதிப்பெண்களுடன் ஏ++ தரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் ஆக.8-ஆம் அறிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க