டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
சின்னச்சுருளி அருவியில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம், வருஷநாடு அருகே உள்ள மேகமலை சின்னச்சுருளி அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத் துறையினா் புதன்கிழமை அனுமதி அளித்தனா்.
வருஷநாடு அருகே மேகமலை-கோம்பைத் தொழு இடையே உள்ள வனப் பகுதியில் சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் 40 அடி உயரத்தில் உள்ள பாறைகள் வழியாக தண்ணீா் கொட்டும். இங்கு கடந்த 30 நாள்களுக்கு முன்பு, 8 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சீரமைப்பதற்காக பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா். இந்த நிலையில், தற்போது சின்னச்சுருளி அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு மேகமலை வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.