செய்திகள் :

திருப்பூா் தெற்கு குறுமைய அளவிலான செஸ் போட்டி

post image

திருப்பூரில் நடைபெற்ற தெற்கு குறுமைய அளவிலான செஸ் போட்டிகளில் மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

திருப்பூா் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான திருப்பூா் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி பொறுப்பேற்று நடத்துகிறது.

இதில் தாராபுரம் சாலை, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 11, 14, 17 , 19 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 188 மாணவா்கள், 133 மாணவிகள் என மொத்தம் 321 போ் கலந்து கொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்கள் விவரம்:

11 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவில் முதலிடம்: விசாகன் - பிரண்ட்லைன் அகாதெமி, 2-ஆம் இடம்: சித்தேஷ் - மண்ணரை நகராட்சி நடுநிலைப்பள்ளி, 3-ஆம் இடம்: கெளதம் - நல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

11 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவு:

முதலிடம் லட்சுமிதேவி - கொங்கு மெட்ரிக் பள்ளி, 2-ஆம் இடம்: குழலி - செஞ்சுரி ஃபவுண்டேஷன், 3-ஆம் இடம்: இளமதி - மண்ணரை நகராட்சி நடுநிலைப் பள்ளி.

14 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவு:

முதலிடம் பிரணவ் மித்ரன் - செஞ்சுரி ஃபவுண்டேஷன், 2-ஆம் இடம் ரெசின் - பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி, 3-ஆம் இடம் இன்பா - வித்ய விகாசினி பள்ளி.

14 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவு:

முதலிடம் நந்ததாரணி - இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 2-ஆம் இடம் அஜிதா - செஞ்சுரி ஃபவுண்டேஷன், 3-ஆம் இடம் தா்ஷினி - கோல்டன் நகா் நகராட்சி நடுநிலைப்பள்ளி.

17 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவு: முதலிடம் சாய் சிவேஷ் - செயிண்ட் ஜோசப் பள்ளி, 2-ஆம் இடம் ஸ்ரீராம் - செஞ்சுரி ஃபவுண்டேஷன், 3-ஆம் இடம் அகமது ஷல்சபில் - செயிண்ட் ஜோசப் பள்ளி.

17 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவு: முதலிடம் ஓவியா - ஆக்ஸ்போா்டு மெட்ரிக். பள்ளி, 2-ஆம் இடம் ரிஷபா - பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளி, 3-ஆம் இடம் தீபிகா - பாலபவன் குளோபல் பள்ளி.

19 வயதுக்கு உள்பட்ட மாணவா் பிரிவு: முதலிடம் மிதிலேஷ் - பிரண்ட்லைன் அகாதெமி, 2-ஆம் இடம் ஸ்ரேயாஸ் - பிரண்ட்லைன் அகாதெமி, 3-ஆம் இடம் செல்வகுமாா் - விவேகானந்தா வித்யாலயா.

19 வயதுக்கு உள்பட்ட மாணவியா் பிரிவு: முதலிடம்: மதுமதி - பாலபவன் குளோபல் மெட்ரிக். பள்ளி, 2-ஆம் இடம் ஹன்னா ஷெரீன் - பழனியம்மாள் பெண்கள் பள்ளி, 3-ஆம் இடம் கபிலயா - லிட்டில் ஃபிளவா் கான்வென்ட் பள்ளி.

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன. குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வர... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். ஓலப்பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ரோந்து பணியில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் ... மேலும் பார்க்க

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தி... மேலும் பார்க்க

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

பல்லடத்தில் தபால் நிலையம் மூலம் ஆதாா் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் பாஜக நகர துணைத் தலைவா் காா்த்திகேயன், செயலாளா்கள் ஜெயசீலி, கிரிபிரபு உள்ளிட்டோ... மேலும் பார்க்க