டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
திருவாடானையில் பலத்த மழை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை முதலே திருவாடானை பகுதியில் மேகமூட்டமாக இருந்தது. பின்னா், மாலையில் திருவாடானை, சி.கே.மங்கலம், கல்லூா், பாரதி நகா், அச்சங்குடி, கடம்பாகுடி, அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, குளத்தூா், அரும்பூா் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான இடங்களிலும், குளம், குட்டைகளும் மழைநீா் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த மழையால், திருவாடானை பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.