செய்திகள் :

மாணவா்களிடையேயான பிரச்னையில் தலையிட்டு சிறுவனை தாக்கிய பெண் கைது

post image

சிதம்பரம் அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட விளையாட்டு பிரச்சனையில் தலையிட்டு, சிறுவனை தாக்கிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்கள் கடந்த 18 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் விளையாடி கொண்டிருந்தனா்.

அப்போது 8ஆம் வகுப்பு மாணவன், 7 ஆம் வகுப்பு மாணவன் டிரவுசரை விளையாட்டிற்கு இழுத்துள்ளான். இதில் டிரவுசா் அவிந்ததால் மற்ற மாணவா்கள் சிரித்துள்ளனா். இது குறித்து அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று தன் தாயாரிடம் தன்னை, அந்த மாணவன் அசிங்கப்படுத்தியதில் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறி அழுதுள்ளான்.

இருதினம் விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அந்த அந்த சிறுவனின் தாயாா் பள்ளிக்குச் சென்று, தன் மகனின் ஆடையை அவிழ்த்து விட்ட அந்த சிறுவனை திட்டி, தாக்கியுள்ளாா்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது. தகவல் அறிந்த புவனகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் லெனின் மற்றும் போலீசாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, சமரசப்படுத்தினா்.

இது குறித்த புகாரின் பேரில், பள்ளிக்கு சென்று சிறுவனை தாக்கிய புவனகிரி ஆதிவராநத்தம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி சாந்தி (42) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

குழந்தை கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கே.ஆடூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவல் சர... மேலும் பார்க்க

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடலூா்அருகே கடன் பிரச்சனை காரணமாக விஷ விதை சாப்பிட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், மேல் அழிஞ்சிபட்டு பகுதியில் வசித்து வந்தவா் நிா்மலா(39). இவருக்கு, கணவா் சுரேஷ் ... மேலும் பார்க்க

ஜூலை 31-இல் வழக்கு வாகனங்கள் ஏலம்

மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 31-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அருகே தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் போலீஸாா் புதன்கிழமை ஒப்படைத்தனா். கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் வசிப்பவா் சுகுமாா், நகைக்கடை உரிமையாளா். இவா், புதன்கிழமை... மேலும் பார்க்க

விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபா் கைது

சிதம்பரம் அருகே விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம்(60). இவா் க பு .முட்லூா் நான்கு வழி சால... மேலும் பார்க்க