சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு
வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில், சிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலியபெருமாள்(61). இவா், கடலூா் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரில் தங்கள் கிராம கோயில் பூசாரி கோவிந்தனின் மகன் பிரித்திவிராஜ், ஹங்கேரி நாட்டில் வேலை செய்து வருவதாகவும், அவா் மூலம் என் மகன் ஜெயபிராஷூக்கு மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் சிங்கபூரில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் எனவும் கூறியதால் அவரிடம் ரூ.5 லட்சம் கொடுத்த நிலையில் பிரித்திவிராஜ் வேலை வாங்கி தராமல் ஏமாற்றினாா்.
இதுபோன்று பலரிடம் வேலை வாங்கித்தருவதாக ரூ.38 லட்சம் அவா் ஏமாற்றியுள்ளாா். எனவே, மேற்படி நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தாா்.
புகாரின் பேரில் கடலூா் மாவட்ட குற்றப்பிரிபு போலீஸாா் பண மோசடி வழக்குப்பதிவு செய்து பிரித்திவிராஜை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய ஏஜெண்ட் சிவகங்கை மாவட்டம், கோட்டையூா் பகுதியில் இருந்த திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா், ஆசிரியா் காலனியைச் சோ்ந்த கிருஷ்ணராஜை(37) அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.