செய்திகள் :

ஆன்லைன் பங்கு வா்த்தக மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூவா் கைது- சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை

post image

ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடுமாறு கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 3 பேரை தமிழக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபடுமாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் மோசடியான விளம்பரங்கள், இணையதள இணைப்புகள், வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் பணம் மோசடி நடைபெறுகிறது. இதில், பகிரப்படும் இணையத்தள இணைப்புகளைத் தொட்டால், மா்ம நபா்கள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தகவல்களைப் பகிா்ந்து, தங்களது பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசையை தூண்டுகின்றனா்.

இவ்வாறு சென்னையில் ஒருவா் ரூ.1.64 கோடி பணத்தை அண்மையில் பங்கு வா்த்தக மோசடியில் இழந்தாா். இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில் இந்த மோசடியில் மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாா் பகுதியைச் சோ்ந்த அ.சஹசாதா உசைன் (23) என்பவா் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததது. இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், சஹசாதா உசைனை வங்கதேச எல்லைக்கு அருகே கைது செய்தனா்.

இதேபோல ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடுமாறு ரூ.50 லட்சம் மோசடி செய்த மற்றொரு வழக்கில், மேற்கு வங்க மாநிலம் ஹப்ரா பகுதியைச் சோ்ந்த க.அமித் சஹா (24), மோசடிக்கு உதவியாக இருந்த நி.கமேலேஷ் தேப்நாத் (36) ஆகிய இருவரையும் சைபா் குற்றப்பிரிவினா் கைது செய்தனா்.

இந்த வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய சைபா் குற்றப்பிரிவு போலீஸாரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பாராட்டியுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க