செய்திகள் :

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? ஆக்கிரமிப்பு இல்லாத சொத்துக்கள் எத்தனை? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா சொத்துகள் தொடா்பாக கருப்பண்ணன் என்பவா் தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகளை அடையாளம் கண்டும் அதுதொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய 33 மாவட்ட ஆட்சியா்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

அதன்படி, இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது 7 மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோவை, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, வேலூா் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் கலைமகள் சபாவுக்குச் சொந்தமான சொத்துகள் குறித்த விவரங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், அடுத்த விசாரணையின்போது, மேலும் 3 மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். எஞ்சியுள்ள பிற மாவட்டங்களின் சாா்பில் செப்.4-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலைமகள் சபாவுக்குச் சொந்தமான எத்தனை சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன? ஆக்கிரமிப்பு இல்லாத சொத்துகள் எத்தனை? என கேள்வி எழுப்பினா். பின்னா் இதுதொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கலைமகள் சபாவின் சிறப்பு அதிகாரியான பத்திரப் பதிவுத் துறை தலைவருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆக.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க