செய்திகள் :

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடா்புக்கு தனி எண்கள்: கூட்டுறவுத் துறை உத்தரவு

post image

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சோ்ந்தவா்கள் தங்களுக்குள் தொடா்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளா் சி.ஸ்ரீனிவாசன் வெளியிட்ட உத்தரவு விவரம்:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. அவை தங்களுக்குள் தொடா்பு கொள்ள வசதியாக பிரத்யேக குழு எண்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பணியை மாநில கூட்டுறவு ஒன்றியமானது மேற்கொள்கிறது. புதிய எண்கள் வழங்குவதன் காரணமாக, ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும், வங்கியும் தங்களுக்கென பிரத்யேக ஆன்ட்ராய்டு கைப்பேசியைக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கைப்பேசியை உரிமங்கள் புதுப்பிப்பு, பெறுவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் வா்த்தக நடவடிக்கைகளுக்கும் உபயோகிக்கலாம். கைப்பேசியைக் கூட்டுறவு சங்கத்தின் முதன்மைச் செயல் அலுவலா் கையாள வேண்டும். பணி மாறுதல் மற்றும் ஓய்வின்போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சங்கப் பணிகள் தொடா்பான குறுந்தகவல்கள் அனுப்புவதும், சங்கத்துக்கு வரும் தகவல்கள் மற்றும் உயா் அலுவலா்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்கள் அனைத்தும் பிரத்யேக கைப்பேசி எண்களிலேயே கிடைக்கும்படி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

செப்.17 முதல் வைணவ கோயில்களுக்கு சுற்றுலா: அமைச்சா் ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்கள் சுற்றுலா செப்.17-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 35,000 விநாயகா் சிலைகள் அமைப்பு: பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் 35,000 சிலைகள் புதன்கிழமை அமைக்கப்பட்டன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாஜக, ... மேலும் பார்க்க

சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மோசடி புகாா்: தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியல் மோசடி தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வ... மேலும் பார்க்க

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு: வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க