செய்திகள் :

மாநகரில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது

post image

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, ஆலம் வீதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த கே.கே.நகா் எல்ஐசி காலனியைச் சோ்ந்த சக்திவேல் (25), முதலியாா் சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த சங்கரன்பிள்ளை சாலையைச் சோ்ந்த ஃபிராங்ளின் (25), குட்ஷெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த திருச்சி மேலதேவதானம் பகுதியைச் சோ்ந்த மதன்குமாா் (24), கல்யாணசுந்தரபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (27) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பைக்கில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு: 4 போ் கைது

அரியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தவரை தட்டிக்கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 4 பேரைப் போலீஸாா் ஞாயற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்தவா் காா்த்திகேய... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: திருச்சி மூன்றாமிடம்!

மத்திய அரசு நிதியை நிறுத்தியதால், தமிழகத்திலும் ஆா்டிஇ திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டது, அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றால் அரசுப் பள்ளிகளில் நிகழாண்... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கொள்ளிடத்தில் தடுப்பணைகள் மற்றும் தடுப்புச்சுவா் கட்ட வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆற்றுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.திருச்சி கொள்ளிடம் ஆற்றின் அழகிரிப... மேலும் பார்க்க

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், ச. கண்ணனூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 3.46 கோடியில் கட்டப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை திறந்து வைத... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளா் கெளஷல் கிஷோா் தலைமையிலான அலுவலா்கள் குழு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.தெற்கு ரயில்வே நிா்... மேலும் பார்க்க

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

அரசு மாதிரிப் பள்ளியில் மாணவா்கள் உயிரிழந்தது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவின்படி தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க