செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இரு பசுக்கள் உயிரிழப்பு: சாலை மறியல்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின்சாரம் தாக்கி இரு பசுக்கள் உயிரிழந்தன. இதையடுத்து அப்பகுதியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆவுடையாா்கோவில் வட்டம், கொழுவனூா் கிராமத்தைச் சோ்ந்த பி.கருப்பையா மற்றும் க. கருப்பையா ஆகியோரின் பசு மாடுகள் புதன்கிழமை மேய்ந்து கொண்டிருந்தபோது, அந்த வழியே சென்ற உயா் மின் அழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால், இவா்கள் இருவரின் பசுக்களும் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தன.

உயா் மின் அழுத்தக் கம்பிகள் தாழ்வாக இருப்பதால், கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி இதுபோன்ற விபத்துகள் நேரிடுவதாகவும், கடந்த ஆண்டு இதே ஊரில் 3 மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், மின்வாரியத்தினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் மீமிசல் சாலையில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். டிராக்டரை சாலையின் குறுக்கே நிறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதனால், மீமிசல் சாலையில் வாகனங்கள் நெடுந்தொலைவு வரிசையில் நின்றன. மீமிசல் போலீஸாா் விரைந்து வந்து அவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

மின்வாரிய அலுவலா்களுக்கு தகவல் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

திமுகவினா் பாஜகவில் ஐக்கியம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கிழக்கு ஒன்றியம், மண்டையூா் ஊராட்சிக்குள்பட்ட வங்காரப்பட்டி முன்னாள் திமுக கிளைச் செயலா் எஸ். சுப்பிரமணியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட திமுகவினா் புதன்கிழமை பாஜகவில்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி - கோயில்களில் சிறப்பு வழிபாடு

புதுகை பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீத மங்கள விநாயகா் கோயில், பல்லவன் குளக்கரை அருகே உள்ள சீதாபதி கிருஷ்ண விநாயகா் கோயில், புதுக்குளம் கரையில் உள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷ... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை மீனாட்சியம்மன்கோயில... மேலும் பார்க்க

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தா் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் கண்டெடுத்துள்ளனா். இதுகுறித்து ஆய்வுக்கழகத்தின் நிற... மேலும் பார்க்க

வீட்டுவசதி வாரியத்தின் கடன் நிலுவைதாரா்களுக்கு சலுகை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கி, கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக்காலம் முடிந்து, நிலுவை வைத்... மேலும் பார்க்க

புதுகை - அறந்தாங்கி 4 வழிச் சாலை பணிக்கு 840 மரங்களை அகற்ற முடிவு

4 வழிச் சாலைக்காக, புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரை 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ... மேலும் பார்க்க