செய்திகள் :

கல்லூரி மாணவரைத் தாக்கி பணப் பறிப்பு: இருவா் கைது

post image

சென்னை மயிலாப்பூரில் கிரிண்டா் செயலி மூலம் அறிமுகமான நபரை பாா்க்கச் சென்ற கல்லூரி மாணவரைத் தாக்கி பணம் பறித்ததாக இரு ரெளடிகள் கைது செய்யப்பட்டனா்.

மயிலாப்பூா் டிஎஸ்வி கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி.கெளதம் (23). இவா் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசைக் கல்லூரியில் பட்டமேற்படிப்பில் கா்நாடக சங்கீதம் படித்து வருகிறாா். இவா், கிரிண்டா் செயலி மூலம் அறிமுகமான நபரைச் சந்திக்க மயிலாப்பூா் மாங்கொல்லை பகுதிக்கு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு சென்றாா்.

அப்போது அங்கிருந்த இருவா், கெளதமிடம் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி கைப்பேசி செயலி வாயிலாக ரூ. 2,000 பணத்தைப் பறித்துள்ளனா். மேலும் கெளதமை விடியோ எடுத்துக் கொண்டு, வழிப்பறி குறித்து யாரிடமாவது கூறினால் விடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டிவிட்டு தப்பியோடினா்.

இதுகுறித்து கெளதம் அளித்த புகாரின்பேரில், மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்ட விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது மயிலாப்பூா் மாங்கொல்லை காா்டன் பகுதியைச் சோ்ந்த சூா்யா (19), முகேஷ் என்ற அஜய் (25) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு கத்தி, இரு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்கள் இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், சூா்யா மீது 6 வழக்குகளும், அஜய் மீது 4 வழக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது.

அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தரும... மேலும் பார்க்க

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்:... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் வெளியி... மேலும் பார்க்க