செய்திகள் :

போனி கபூா், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு

post image

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா் உள்ளிட்டோா் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் புழுதிவாக்கம் பாலாஜி நகரைச் சோ்ந்த எம்.சிவகாமி என்பவா் தாக்கல் செய்த மனுவில், சோழிங்கநல்லூா் பகுதியில் எங்களுக்குச் சொந்தமான 2.70 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எங்களுக்குத் தெரியாமல், எங்களது குடும்ப வாரிசுகள் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு விற்பனை செய்துள்ளனா்.

தற்போது அந்த நிலத்துக்கு ஸ்ரீதேவியின் கணவா் போனி கபூா் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூா் மற்றும் குஷி கபூா் ஆகியோரது பெயா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. எனவே, அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்குச் சொந்தமான அந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எம்.பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் கடந்த ஆண்டு செப்.5-ஆம் தேதி கொடுத்த மனுவை சென்னை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்டாட்சியா் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி பரிசீலித்து 12 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தரும... மேலும் பார்க்க

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்:... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் வெளியி... மேலும் பார்க்க